கவிதை பேசுகிறது

என்னுடைய வரிகளும்.. நான் ரசித்த வரிகளும்...

Tuesday, October 21, 2008

I am back

Finally I am back.. after 2 years...

நிறைய நாட்கள் ஆகிவிட்டது.. ஹ்ம்ம்ம்..

இந்த வாரம் என்னுடைய பழைய கல்லூரி நன்பர்களை சந்தித்தேன்..

..சில வரிகள்.. அதன் நினைவுகளாய்...



என்றோ மறந்த நினைவுகள்...கடந்து வந்த வருடங்கள்... அழித்து எழுதிய நினைவுகள் பல... ஆனாலும்...பழைய நண்பர்களை பார்க்கும்பொழுது தோன்றும் சந்தோஷம்....என்னுடைய பழைய வரிகளையே நினைவூட்டுகிறது...



என்றாவது ஒருநாள்
எப்படியாவது நாம்
சந்திப்போம்...
பேசத் தோன்றாமல்..
விக்கித்து நின்று

விழிகளால் நலம் விசாரிப்போம்..

இந்த நேசப் பிரிவில்
நான் நிச்சயம் நெகிழ்ந்திருப்பேன்.....


சத்தியமான வரிகள்...உண்மையும் ஆகி விட்டது இன்று.. ஊன்னை சந்தித்த அந்தப் பொழுது எனக்கு தோன்றிய வரிகள்தான் இவை...