உன்னைப் பற்றி சில வரிகள்...
உனக்காக நான் எழுதும் கவிதை..
பல நாட்களுக்கு பிறகு
நான் எழுதும் முதல் கவிதை..
தொடர் கவிதையாய் தொடர வேண்டும்
என்ற எண்ணத்தில் தான்..
நான் உணர்ந்த உண்ர்வுகளை
வார்த்தைகள் தேடி வடிக்க
எண்ணினேன்...
போன வாரம் இதே நாள்..
நீ யாரோ?... நான் யாரோ?..
யாரும் அறியார்..
எண்ணி எட்டு நாட்களில்
எனக்கு கிடைத்த அறிய நட்பு...
உன்னுடையது..
நன்றி
அதற்கு என்று
வார்த்தைகளில் கூறி
இடைவெளி ஏற்படுத்த
மனது அனுமதிக்கவில்லை..
எண்ணிப் பார்த்தால்
வியப்பாய் இருக்கிறது..
வாழ்க்கைதான்
எத்தனை பொக்கிஷங்களை
தன்னுள்ளே கொன்டுள்ளது..
என் வாழ்க்கையில் நடந்த பல நிகழ்வுகள்..
மறக்க முடியாத பல நினைவுககள்...
மதிக்க மறந்த பல நினைவுகள்..
எண்ணில் அடங்கா பல உணர்வுகள்..
எண்ணிப் பார்க்க பல நிகழ்வுகள்..
மறந்து வாழ பல நிகழ்ச்சிகள்..
பற்றுதலாய் பல உறவுகள்..
உன் நட்பென்ற உறவு
என்னுள் ஏற்படுத்திய பல உணர்வுகள்..புதிதாய்
என்னையே எனக்கு உணர்த்துவதாய்...
ஆம்..
நல்ல உணர்வுதான்..
நான் நானாகவே இருப்பதாய் உணர்கிறேன்...
எண்ணாமல் வரும் வார்த்தை...
எண்ணத்தை பேசும் பேச்சு..
எதிர்பார்ப்பு இல்லாத நட்பு..
நன்றி
என்ற வார்த்தையை
உபயோகிக்க கூடாது
என்றாலும் முட்டிக் கொண்டு நிற்கின்றது..
நன்றி.!..

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home