கவிதை பேசுகிறது

என்னுடைய வரிகளும்.. நான் ரசித்த வரிகளும்...

Saturday, December 13, 2008

பிடிக்கும்...

எல்லாம் பிடிக்கும் எனக்கு!!
என்னைக் கடந்து
வேகமாய் போகும் உன் வாகனம்!!

தொலைவில் கேட்கும்
உன் கம்பீரமான குரல்..

பக்கத்தில் சேலை
நுனி பிடித்து சிரிக்கும்
அந்தக் குழந்த்தையின் சிரிப்பு..


எதிர்படும் போது மலரும்
பக்கத்து வீட்டு
பாட்டியின் முகம்!!..

இரவின் தனிமையில்
இனிமையாய் கேட்கும் சங்கீதம்..

தொடத்தொட ஸூடாய்
அருந்த்திட ருஷியாய்
அம்மா சமைத்த

கார சார சமையல்..


எல்லாம் பிடிக்கும் எனக்கு..

அந்த "பிடிக்கும்" என்ற

வார்த்தையையும் சேர்த்து..



0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home