சில துளிகள்..

சில துளிகள்..
உன் மவுனங்களை
சேமித்து வை..
என் கல்லறையில்
கதறியழப் பயன்படலாம்.......
எச்சரிக்கையாய்த்தான் வருகிறேன்..
என்றாலுமென்ன
என்னையறியாமல்..
தவறி விழ நேரிடுகிறது..
ஒவ்வொரு முறையும்..
உன் கன்னத்துக்குழிக்குள்..
கை சிவக்க மருதாணி
எதற்கு?
தொட்டு வைத்துக் கொள்..
உன் வெட்கத்தை..
அதே கன்னத்தில்
ரகசியமாய் நானும் முத்தமிட்டேன்
ஏதும் புரியாமல் சிரிக்கிறது..
பக்கத்து வீட்டுக் குழந்தை!.
கொலுசணிந்த உன்பாதங்கள்
என் வீட்டுக்கு வெளியே
நடை பயிலும்போதெல்லாம்
எட்டாவது ஷ்வரத்தை
சுவாசிக்க முடிகிறதென்னால்..





