கவிதை பேசுகிறது

என்னுடைய வரிகளும்.. நான் ரசித்த வரிகளும்...

Saturday, June 17, 2006

சில துளிகள்..




சில துளிகள்..

உன் மவுனங்களை
சேமித்து வை..
என் கல்லறையில்
கதறியழப் பயன்படலாம்.......

எச்சரிக்கையாய்த்தான் வருகிறேன்..

என்றாலுமென்ன

என்னையறியாமல்..

தவறி விழ நேரிடுகிறது..

ஒவ்வொரு முறையும்..

உன் கன்னத்துக்குழிக்குள்..

கை சிவக்க மருதாணி

எதற்கு?

தொட்டு வைத்துக் கொள்..

உன் வெட்கத்தை..


நீ முத்தமிட்டுச் சென்ற

அதே கன்னத்தில்

ரகசியமாய் நானும் முத்தமிட்டேன்
ஏதும் புரியாமல் சிரிக்கிறது..

பக்கத்து வீட்டுக் குழந்தை!.


கொலுசணிந்த உன்பாதங்கள்

என் வீட்டுக்கு வெளியே

நடை பயிலும்போதெல்லாம்

எட்டாவது ஷ்வரத்தை

சுவாசிக்க முடிகிறதென்னால்..

வரிகளின் விளக்கம்..

மொட்டு மலர்ந்ததது 'பூவாக'
காய் கனிந்தது பழமாக.

சூரியன் உதித்தது பகலாக
சந்திரன் தோன்றியது நிலவாக!..

பூ மலர்ந்ததது மணமாக
புன்னகை பிறந்தது இதமாக!.

மாலை மங்கியது இரவாக
மதியும் மயங்கியது கனவாக

அன்பு தொடங்கியது நட்பாக!
அன்னையின் அணைப்பு ஆதரவாக!..

வார்த்தை பிறந்தது வரியாக!
வரியும் வரைந்தது உரையாக!..

உரை பயின்றது நடையாக!.
நடை தொடகியது கவிதையாக!

தோன்றிய கவிதைகளின்
தொகுப்புரை இங்கே!..

துளிகளாய் சிதறவிடிருக்கிறேன்!!..
என் சிந்ததையை..

எழுத்துக்களாய் வடித்திருக்கிறேன்..
என் எண்ணங்களை..

கற்பனைகளை செதுக்கி இருக்கிறேன்..
என் வாழ்வின் நிஜங்களை..
அனுபவங்களை ஆராதித்து இருக்கிறேன்.. தமிழ் வரிகளில்..

ஆழ்கடலில் முத்தெடுத்து இருக்கிறேன்..
என் மனதின் உணர்ச்சிகளை..

வடித்திருகிறேன் வார்தைகளாக...


Thursday, June 08, 2006

தோழியே உனக்காகத்தான்...


தோழியே உனக்காகத்தான்...


மலரும் நினைவுகளாய் -

மனதில்.
எண்ணி மகிழ்ந்திட
நிகழ்ச்சிகள் நம் வாழ்வில் பல
என்றாலும்
மகிழ்ச்சியாய் எண்ணி மகிழ்ந்திட..
நிகழ்ச்சிகள் பல நம் வாழ்வில்.

நிஜம் கூறும் நினைவுகள் பல..
என் வாழ்வில்..
சொல்லி மகிழ்ந்திட செய்கைகள்
- செயல்கள்
பல நம் வாழ்வில்
என்றாலும் அள்ளி அணைத்திட

ஆர்பரித்த அன்பு நினைவுகள்
பலப்பல உன்னால் என் வாழ்வில்..

நினைவுகள் சுகம்தான் நித்திரையிலும்..
நாம் கன்ட கனவுகளும் சுகம்தான் .. கற்பனையிலும்..

உன் நட்பும் சுகம்தான்
என் மனதிற்கும்..

உன் செயல்களும் சுகம்தான்
எண்ணி மகிழ்வதற்கும்..

நீ கண்ட -
காணும் நினைவுகளை
நிஜங்களாக்க..

காவிய தமிழச்சியே..

உன் தோளோடு தோள் சேரக் -
காத்திறுகின்றன.. பலஇதயங்கள்..
நட்பாய்..இந்த பாரத பூமியில்

என்றாலும்

நான் யாசிப்பது என்னவோ
உன் நினைவுகளில் என்பெயர் உச்சரிக்கப்பட வேண்டும் என்பதுதான்...
உன்னால் முடியாது என்பெயரை மறப்பதென்பது
நான் அறிந்ததுதான்
ஆம்...
நீ உயிருள்ளவரை
எனை மறக்கவும் முடியாது..
இதை மறுக்கவும் முடியாது..


Friday, June 02, 2006

Superb



SS Music VJ பத்தி ஒரு Article..


Greg சொன்ன வார்தைகள்.. superb.. ரொம்ப நல்லா இருந்தது..

"மனசை திறந்து வைடா மச்சான்..எதிர்ல எதிரியே வந்தாலும் நேஷி.."

நல்ல வார்த்தைகள்..

எனக்கு ரொம்ப புடிச்சு இருந்தது..

Thursday, June 01, 2006

என்னவளே..




என்னவளே..
என் நினைவுகளில்
என்றும்
நிறைந்திருப்பவளே!

என்றாவது ஒருநாள்
எப்படியாவது நாம்
சந்திப்போம்...
பேசத் தோன்றாமல்..
விக்கித்து நின்று

விழிகளால் நலம் விசாரிப்போம்..

இந்த நேசப் பிரிவில்
நான் நிச்சயம் நெகிழ்ந்திருப்பேன்....

உன் நினைவுகளை
சேகரிக்கும் கவனத்தில்..
இன்றிலிருந்தே

உறக்கத்தைதொலைத்து..

உணர்வுகளுக்கு அடிமைகளாகி
உரிமையாய்

உன்உள்ளத்தில்
இடம்தேடிக் காத்திருப்பேன்.

நட்பாய்..

இன்றிலிருந்தே...