அழியாத நினைவுகளாய்..
தொடர நினைத்த வரிகள்..தொடர்ந்து வந்த வேலையால் தொடர முடியாமல் போய்விட்டது.
சில வினாடிகள் பலப்பல எண்ணங்களின் பரிமாற்றங்கள்..என்னுள்ளே..
எண்ணக்குவியலின் மோதலில் சிக்குண்ட என்னை
அவள் கடந்து போகையில் ..அவள் இதழோரதில் ஒரு குறும் சிரிப்பு...
வேகமாய் கடந்து சென்ற அவளின் சேலை முந்தானை என்னை வருடிச் சென்றது..
கொஞ்சம் நளினமாய்.. மின்னலாய்
திரும்பிப்பார்த்து மன்னிப்பு கேட்டது அவளின் பண்பாடு.
தென்றலாய் வருடிச் சென்ற அந்த முகம்...
தெளிவாய் என் மனதிற்குள்..
தொடந்து வந்த என் வேலைகளினால் மறந்து போனது..
சில நாள் கழித்து கனவில் அவள் முகம்..
தெளிவாய்..இனிமையாய் ..
கடந்து சென்றது சில நொடிகளில்தான் என் கண்ணில் பட்டாள்
கலையாத கனவாய் அவள் என் மனதில் நின்றாள்.
இது போல பல முகங்கள்...ஒவ்வொருவர் வாழ்க்கையிலும்..
அழியாத நினைவுகளாய்..

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home